Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/கரூர் மாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவ பெருவிழா

கரூர் மாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவ பெருவிழா

கரூர் மாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவ பெருவிழா

கரூர் மாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவ பெருவிழா

ADDED : ஜூன் 09, 2024 03:58 AM


Google News
கரூர்: கரூர் மாரியம்மன் கோவிலில், வைகாசி திருவிழாவையொட்டி, நேற்று வெள்ளி ஊஞ்சல் உற்சவ பெருவிழா நடந்தது.

கரூரில் பிரசித்தி பெற்ற, மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த மே மாதம், 12ல் கம்பம் நடுதலுடன் தொடங்கியது. அதை தொடர்ந்து பூச்சொரிதல் விழா, காப்பு கட்டுதல், மாவிளக்கு ஊர்வலம், அக்னி கரகம் ஊர்வலம், கம்பம் ஆற்றுக்கு செல்லுதல், பஞ்ச பிரகாரம், புஷ்ப பல்லக்கு ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.

நேற்று இரவு, கோவிலில் வெள்ளி ஊஞ்சல் உற்சவ பெருவிழா நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். இன்று இரவு, 7:00 மணிக்கு அம்மன் குடிபுகுதல் நிகழ்ச்சி நடக்கிறது. அதைதொடர்ந்து, கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா நிறைவு பெறுகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us