Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/லங்காடி விளையாட்டு குறித்து மாநில செயற்குழு கூட்டம்

லங்காடி விளையாட்டு குறித்து மாநில செயற்குழு கூட்டம்

லங்காடி விளையாட்டு குறித்து மாநில செயற்குழு கூட்டம்

லங்காடி விளையாட்டு குறித்து மாநில செயற்குழு கூட்டம்

ADDED : மார் 11, 2025 06:59 AM


Google News
குளித்தலை: குளித்தலையில், லங்காடி விளையாட்டு குழு குறித்து, மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

திருப்பூர் மாநில செயலாளர் ராஜன் தலைமை வகித்தார். கரூர் மாவட்ட செயலாளர் அமர்நாத், சங்க செயல்பாடுகள் குறித்து பேசினார். மாநில பொறுப்பாளர்கள் திருச்சி பாஸ்கர், திருப்பூர் பிரகாஷ் முன்னிலை வகித்தனர். திருச்சி. மதுரை, கரூர், திருப்பூர், சேலம் மற்றும் தென்காசியை சேர்ந்த, 29 மாவட்ட செயலாளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சிறப்பாளராக, பா.ஜ., மாநில மகளிர் அணி துணைத் தலைவர் மீனா வினோத்குமார் பங்கேற்றார்.

இக்கூட்டத்தில், வரும் காலங்களில் லங்காடி விளையாட்டு போட்டி தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற வேண்டும். செப்டம்பரில், மாநில அளவில் லங்காடி போட்டி திருப்பூர் மாவட்டத்தில் நடத்துவது என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us