சட்ட விரோத மதுபாட்டில் விற்பனை: 3 பேர் கைது
கரூர்: கரூர் மாவட்டத்தில், சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்த, மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
கரூரில் பா.ஜ., செயல்வீரர்கள் கூட்டம்
கரூர்: கரூரில், பா.ஜ., செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. கரூர் சட்டசபை தொகுதி அமைப்பாளர் செல்வன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் செந்தில்நாதன் பேசுகையில், ''வரும் லோக்சபா தேர்தலில் வெற்றி பெற, மத்திய அரசின் திட்டங்களை வீடுகள் தோறும் கொண்டு சென்று சேர்க்க வேண்டும். பா.ஜ.,வை மக்கள் விரும்பத் தொடங்கிவிட்டனர். நமக்கு நல்ல சூழல் இருப்பதால் அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,'' என்றார்.
மேல்நிலைப்பள்ளியில் சாரண சாரணியர் முகாம்
கிருஷ்ணராயபுரம்: சின்னமநாய்க்கன்பட்டி, அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், குளித்தலை கல்வி மாவட்ட பாரத சாரண சாரணியர் சார்பில், அரசு ஆதிராவிடர் பள்ளிகளுக்கான சாரண பயிற்சி முகாம் நடந்தது.
டூவீலர் மோதல்; வாலிபர் பலி
கரூர்: கரூர் அருகே, டூவீலர் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார்.புதுக்கோட்டை மாவட்டம், சந்தம்பட்டி பகுதியை சேர்ந்த செந்தில் குமார் என்பவரது மகன் ஞானவேல், 21. இவர் நேற்று முன்தினம் இரவு, கரூர்-கோவை சாலை மொச்சம் கொட்டம்பாளையம் பகுதியில், நின்று கொண்டிருந்தார்.