ADDED : செப் 22, 2025 03:59 AM
கரூர்: கரூர், பசுபதிபாளையம் போலீஸ் ஸ்டேஷன் இரண்டாம் நிலை காவலர் பிரபாகரன், 35; வெங்கமேட்டை சேர்ந்தவர். பசுபதிபாளையத்தை சேர்ந்தவர் கவுதமன், 35. இருவரும் செப்., 19 நள்ளிரவில், சணப்பிரட்டி அருகே டூ - வீலரில் சென்றனர்.
அங்கு ஒரு வாலிபரும், இளம்பெண்ணும் பேசி கொண்டிருந்ததை பார்த்தவர்கள் , இளைஞரை தாக்கி , பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டனர்.
பெண் புகார்படி, பசுபதிபாளையம் போலீசார், காவலர் பிரபாகரனை , நேற்று முன்தினம் கைது செய்த நிலையில், நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தலைமறைவான கவுதமனை தேடி வருகின்றனர்.