Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.200க்கு விற்பனை

கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.200க்கு விற்பனை

கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.200க்கு விற்பனை

கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.200க்கு விற்பனை

ADDED : செப் 22, 2025 02:15 AM


Google News
கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் அடுத்த லாலாப்பேட்டை, பிள்ளபாளையம், வல்லம், கொம்பாடிப்பட்டி, கருப்பத்துார், கள்ளப்பள்ளி, வீரவள்ளி, வீரகுமரான்பட்டி ஆகிய பகுதிகளில் வாழை சாகுபடி அதிகளவில் நடக்கிறது. விளைந்த வாழைத்தார்களை அறுவடை செய்து, லாலாப்பேட்டை வாழைக்காய் ஏல கமிஷன் மண்டிகளில் கொண்டு வந்து விவசாயிகள் விற்பனை செய்கின்றனர்.

தற்போது, நெல் சாகுபடி காரணமாக வாழை சாகுபடி குறைந்துள்ளது. இதுனால் வாழைத்தார் வரத்து சரிந்தது. இதன் காரணமாக, ரஸ்தாளி வாழைத்தார், 350 ரூபாய், கற்பூரவள்ளி, 200 ரூபாய், பூவன், 250 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. உள்ளூர், வெளியூர் வியாபாரிகள் வாங்கி சென்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us