/உள்ளூர் செய்திகள்/கரூர்/ அமராவதி கிளை வாய்க்காலில் கழிவுநீர்: துார்வார வலியுறுத்தல் அமராவதி கிளை வாய்க்காலில் கழிவுநீர்: துார்வார வலியுறுத்தல்
அமராவதி கிளை வாய்க்காலில் கழிவுநீர்: துார்வார வலியுறுத்தல்
அமராவதி கிளை வாய்க்காலில் கழிவுநீர்: துார்வார வலியுறுத்தல்
அமராவதி கிளை வாய்க்காலில் கழிவுநீர்: துார்வார வலியுறுத்தல்
ADDED : ஜூலை 02, 2025 02:29 AM
அரவக்குறிச்சி, கூடலுார் கீழ்பாகம் பகுதியில் உள்ள, பாலத்தின் நடுவே இருபுறமும் கழிவுநீர் செல்வதால், கிளை வாய்க்காலை துார்வார வேண்டும்.
சின்னதாராபுரம், அமராவதி கிளை வாய்க்கால் ஒத்தமந்துறையில் இருந்து ராஜபுரம் வரை அமைந்துள்ளது. விவசாய பாசனத்திற்காக, அமராவதி கிளை வாய்க்காலில் தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், கூடலுார் கீழ்பாகம் பகுதியில் உள்ள பாலத்தின் நடுவே, இருபுறமும் கழிவு
நீர் செல்வதால், அமராவதி கிளை வாய்க்காலில் சாக்கடை நீர் கலக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பயன்பாட்டிற்கும், விவசாய பணிகளுக்கும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் உடனடியாக பார்வையிட்டு, நீரை பயன்படுத்த
ஏதுவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.