தரமற்ற கலவையால் சிதறிய ஜல்லி கற்கள்
தரமற்ற கலவையால் சிதறிய ஜல்லி கற்கள்
தரமற்ற கலவையால் சிதறிய ஜல்லி கற்கள்
ADDED : செப் 02, 2025 12:51 AM
கரூர்:கரூர் அருகே, சிறுபாலத்தின் இணைப்பு சாலையில், தரமற்ற சிமென்ட் கலவையால் ஜல்லிக்கற்கள் சிதறியுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
கரூர் மாவட்டம், மண்மங்கலம்-வாங்கல் சாலையில், பல இடங்களில் சமீபத்தில், சாலையின் குறுக்கே, சாக்கடை கால்வாயின் மேல் பகுதியில், புதிதாக சிறுபாலம் கட்டப்பட்டது. சிறுபாலத்தின் இரண்டு இணைப்பு பகுதிகளில், இணைப்பு சாலையும் போடப்பட்டது. அதில், பல இடங்களில் இணைப்பு சாலை தரமற்ற சிமென்ட் கலவையால் போடப்பட்டதால், சமீபத்தில் பெய்த மழையில் ஜல்லிக்கற்கள் சாலையில் சிதறியுள்ளன.
அதற்கு தரமற்ற சிமென்ட் கலவையே காரணம் என, பொது மக்கள் தெரிவித்தனர். எனவே, மண்மங்கலம்-வாங்கல் சாலையில், சிறுபாலம் கட்டப்படும் இடங்களில், இணைப்பு சாலை அமைக்க, தரத்துடன் சிமென்ட் கலவை பயன்படுத்தப்படுகிறதா என, அரசு துறை அதிகாரிகள் கண்காணிக்க
வேண்டும்.