Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கல் குவாரிகளில் ஆய்வு செய்ய வேண்டும் மணல் லாரி உரிமையாளர் சம்மேளனம் மனு

கல் குவாரிகளில் ஆய்வு செய்ய வேண்டும் மணல் லாரி உரிமையாளர் சம்மேளனம் மனு

கல் குவாரிகளில் ஆய்வு செய்ய வேண்டும் மணல் லாரி உரிமையாளர் சம்மேளனம் மனு

கல் குவாரிகளில் ஆய்வு செய்ய வேண்டும் மணல் லாரி உரிமையாளர் சம்மேளனம் மனு

ADDED : மே 31, 2025 06:33 AM


Google News
கரூர்: கரூர் மாவட்டத்தில், கல் குவாரிகளில் ஆய்வு செய்ய வேண்டும் என, தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் செல்ல ராசாமணி உள்ளிட்ட நிர்வாகிகள், நேற்று கரூர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர்.

அதில் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் பல மாவட்டங்களில், எங்களது சம்மேனத்தை சார்ந்த லாரி உரிமையாளர்கள், டிரைவர்கள் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.

ஆனால், சட்ட விதிகளை மீறும் கல்குவாரி உரிமையாளர்களின் லாரிகள் மீது, போலீசார் நடவடிக்கை எடுப்பது இல்லை. கரூர் மாவட்டம், லாலாப்பேட்டையில் சமீபத்தில் சட்டவிதிகளை மீறி இயக்கப்பட்ட, இரண்டு லாரிகளை எங்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் பிடித்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஆனால், அவர்கள் மீது லாலாப்பேட்டை போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.

மாறாக எங்கள் மீது, லாலாப்பேட்டை போலீசார் பொய் வழக்குப்பதிவு செய்தனர். கரூர் மாவட்டத்தில், 72 கிரஷர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், 100க்கும் மேற்பட்ட கிரஷர்கள் செயல்படுகின்றன. எனவே, கரூர் மாவட்டத்தில் உள்ள கல் குவாரி, கிரசர்களில் கலெக்டர் தலஆய்வு மேற்கொண்டு, முறைகேடுகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us