Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ சுக்காலியூர் ரவுண்டானா பாலத்தின் கீழ் பகுதியில் கரடு முரடான சாலை

சுக்காலியூர் ரவுண்டானா பாலத்தின் கீழ் பகுதியில் கரடு முரடான சாலை

சுக்காலியூர் ரவுண்டானா பாலத்தின் கீழ் பகுதியில் கரடு முரடான சாலை

சுக்காலியூர் ரவுண்டானா பாலத்தின் கீழ் பகுதியில் கரடு முரடான சாலை

ADDED : ஜூன் 09, 2025 03:43 AM


Google News
கரூர்: கரூர் அருகே, சுக்காலியூர் ரவுண்டானா பகுதியில் உள்ள பாலத்தின் கீழ் பகுதியில் சாலை பல மாதங்களாக குண்டும், குழி-யுமாக உள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

கரூர் மாவட்டம், சுக்காலியூர் பகுதியில் திருச்சி, சேலம், மதுரை தேசிய நெடுஞ்சாலைகள் இணைகின்றன. இதனால், அப்பகு-தியில் வாகனங்கள் சரிவர செல்லும் வகையில், ரவுண்டானா மற்றும் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், உயர்மட்ட பாலத்தின் கீழ் பகுதியில், சாலை குண்டும், குழியு-மாக உள்ளது. மேலும, எச்சரிக்கை போர்டுகள் உடைந்துள்ளன.

இதனால், திருச்சியில் இருந்து சேலம் தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் வாகன ஓட்டிகளும், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, திருச்சி செல்லும் வாகன ஓட்டிகளும் பெரும் சிரப்படு-கின்றனர். மேலும், அப்பகுதியில் போதிய லைட்கள் இல்லா-ததால், இரவு நேரத்தில் டூவீலர்களில் செல்கிறவர்களும், சாலையில் உள்ள குழிகளில் தவறி விழுந்து காயமடைகின்றனர்.

எனவே, திருச்சி, மதுரை, சேலம் ஆகிய தேசிய நெடுஞ்சா-லைகள் சந்திக்கும் இடமான, சுக்காலியூர் ரவுண்டானாவின் உயர்-மட்ட பாலத்தின் கீழ் பகுதியில் சாலைகளை சீரமைத்து, சேதம-டைந்த எச்சரிக்கை போர்டுகளை புதிதாக வைக்க, நெடுஞ்சா-லைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us