Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ ஓய்வு பெற்ற அலுவலர் சங்க நிர்வாகிகள் கூட்டம்

ஓய்வு பெற்ற அலுவலர் சங்க நிர்வாகிகள் கூட்டம்

ஓய்வு பெற்ற அலுவலர் சங்க நிர்வாகிகள் கூட்டம்

ஓய்வு பெற்ற அலுவலர் சங்க நிர்வாகிகள் கூட்டம்

ADDED : ஜூன் 28, 2025 04:19 AM


Google News
கரூர்: தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், துணைத் தலைவர் சிவக்கொழுந்து தலைமையில், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், சங்க அலுவலகத்தில் நடந்தது.

அதில், மத்திய அரசு அறிவித்த அகவிலைப்படி, 2 சதவீதம் உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது, ஓய்வூதியர்களுக்கு விழா முன்பணம், 6,000 வழங்கியதற்கு நன்றி தெரிவிப்பது, குடும்ப பாதுகாப்பு நிதி, இரண்டு லட்சத்துக்கு, 50 ஆயிரம் வழங்க வேண்டும், அனைத்து ஓய்வூதியர்களுக்கு, 70 ஆண்டு நிறைவு பெற்றால், 10 சதவீதம், 75 ஆண்டு நிறைவு பெற்றால், 15 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துசாமி, இணை செயலாளர் சண்முகம், பொருளாளர் கருப்பன், நிர்வாகிகள் பெரியசாமி, செல்வராஜ், ஜெகநாதன் உள்பட ஓய்வூதியர்கள் பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us