Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

ADDED : ஜூன் 28, 2025 04:18 AM


Google News
கரூர்: தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், மாநில கவுரவ பொதுச் செயலாளர் குப்புசாமி தலைமையில், வட்டார போக்குவரத்து அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

அதில், ரேஷன் கடைகளில் புளூடூத் மூலம் விற்பனை செய்யும் முறையை நீக்க வேண்டும், அனைத்து பொருட்களும் சரியான எடையில், விற்பனை முனையத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும், ரேஷன் கடைகளில் வெளிப்பணி மூலம் உதவியாளரை பணியில் அமர்த்தி கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும், விடுமுறை நாட்களில் நகர்வு பணியை முற்றிலும் கைவிட வேண்டும், பதவி உயர்வில் அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்க வேண்டும், பதவி உயர்வில் எழுத்தர் பணிக்கு அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட, கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட தலைவர் கதிரவன், துணைத்தலைவர்கள் சங்கர லிங்கம், ராமமூர்த்தி, செயலாளர் சுப்பிரமணியன், பொருளாளர் செல்வ ரத்தினம் உள்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us