/உள்ளூர் செய்திகள்/கரூர்/பயனற்ற நிலையில் கழிப்பிடம் பொதுமக்கள் கடும் அவஸ்தைபயனற்ற நிலையில் கழிப்பிடம் பொதுமக்கள் கடும் அவஸ்தை
பயனற்ற நிலையில் கழிப்பிடம் பொதுமக்கள் கடும் அவஸ்தை
பயனற்ற நிலையில் கழிப்பிடம் பொதுமக்கள் கடும் அவஸ்தை
பயனற்ற நிலையில் கழிப்பிடம் பொதுமக்கள் கடும் அவஸ்தை
ADDED : ஜூன் 29, 2025 01:07 AM
கரூர், கரூர் மாநகராட்சி, கருப்பம்பாளையம் சாலை, சுக்காலியூர் பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக, சில ஆண்டுகளுக்கு முன் பொது கழிப்பிடம் கட்டப்பட்டது. அதை, அந்த பகுதியை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், கழிப்பிடம் சில மாதங்களுக்கு முன் சேதம் அடைந்தது. மேலும், கழிப்பிடத்துக்குள் நுழைய முடியாதபடி அதிகளவில் முட்புதர்கள் முளைத்துள்ளது. இதனால், அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கழிப்பிடத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே, சுக்காலியூர் பகுதியில் உள்ள கழிப்பிடத்தை சீரமைத்து, மக்கள் பயன்பாட்டுக்கு விட, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.