Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ இடிந்து விழும் நிலையில் நிழற்கூடம் சீரமைக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு

இடிந்து விழும் நிலையில் நிழற்கூடம் சீரமைக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு

இடிந்து விழும் நிலையில் நிழற்கூடம் சீரமைக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு

இடிந்து விழும் நிலையில் நிழற்கூடம் சீரமைக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு

ADDED : அக் 05, 2025 01:27 AM


Google News
கரூர், கரூர் அருகே எந்நேரமும் இடிந்து விழும் நிலையில் உள்ள, நிழற்கூடத்தை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

கரூர் - ஈரோடு சாலை புன்னம் சத்திரம் பஸ் ஸ்டாப் பகுதியில், பயணிகள் வசதிக்காக முன்னாள் எம்.பி., தம்பிதுரை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, ஐந்து லட்ச ரூபாய் செலவில் கடந்த, 2012-13ல் பயணிகள் நிழற்கூடம் கட்டப்பட்டது.

அந்த நிழற்கூடத்தை, புன்னம் சத்திரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொது மக்கள், பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் பயணிகள் நிழற்கூடத்தின் ஒரு பகுதி சேதம் அடைந்தது. அதை முழுமையாக சீரமைக்காமல் விட்டுள்ளனர். தற்போது, நிழற்கூடம் எந்நேரமும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.

இதனால், பஸ்சுக்காக காத்திருக்கும் பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே, புன்னம் சத்திரம் பஸ் ஸ்டாப்பில் உள்ள, நிழற்கூடத்தை உடனடியாக சீரமைக்க, கரூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us