Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ சாக்கடைகளை துார்வார பொதுமக்கள் எதிர்பார்ப்பு

சாக்கடைகளை துார்வார பொதுமக்கள் எதிர்பார்ப்பு

சாக்கடைகளை துார்வார பொதுமக்கள் எதிர்பார்ப்பு

சாக்கடைகளை துார்வார பொதுமக்கள் எதிர்பார்ப்பு

ADDED : ஜூன் 14, 2025 07:40 AM


Google News
கரூர்: கரூர் நகரில் பெய்த மழையில், சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், தென்மேற்கு பருவ மழை தீவிரம் காட்டும் முன், சாக்கடை கால்வாய்களை துார் வார வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கரூர் நகரில் அக்னி நட்சத்திரம் நிறைவு பெற்ற நிலையிலும், கோடை காலத்தை போல, வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில் கரூர் நகர் மற்றும் பசுபதிபாளையம், வெங்கமேடு, திருமாநிலையூர், சுங்ககேட், காந்திகிராமம், திருகாம்புலியூர் பகுதிகளில் கனமழை பெய்தது. அப்போது நகர பகுதிகளான கோவை சாலை, சுங்ககேட், தெரசா கார்னர், அரசு மருத்துவமனை சாலை, ஜவஹர் பஜார், தின்னப்பா கார்னரில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், பொது மக்கள் சாலைகளில், கார் டூவீலர்களில் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. திருச்சி சாலை தெரசா கார்னரில், இடுப்பு அளவுக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

மாநகராட்சி பகுதியில் உள்ள, சாக்கடை கால்வாய்களை சுத்தம் செய்து, பல மாதங்களாகிறது. மண், பிளாஸ்டிக் பொருட்களால் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வழியில்லை. தென் மேற்கு பருவ மழை தீவிரம் காட்டும் முன், சாக்கடை கால்வாய்களை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us