Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மக்கள் குறைதீர் கூட்டத்தில் நலத்திட்ட உதவி வழங்கல்

மக்கள் குறைதீர் கூட்டத்தில் நலத்திட்ட உதவி வழங்கல்

மக்கள் குறைதீர் கூட்டத்தில் நலத்திட்ட உதவி வழங்கல்

மக்கள் குறைதீர் கூட்டத்தில் நலத்திட்ட உதவி வழங்கல்

ADDED : செப் 02, 2025 12:54 AM


Google News
கரூர்:கரூர் கலெக்டர் அலுவலத்தில், மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, வேலை வாய்ப்பு, கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி உள்பட, 398 மனுக்களை பெற்றார்.

தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 3 நபர்களுக்கு, 9,855 ரூபாய் மதிப்பீட்டிலான காதொலி கருவி, ஒருவருக்கு, 9,954 ரூபாய் மதிப்பீட்டிலான டெய்சி பிளேயர் என மொத்தம், 4 பயனாளிகளுக்கு, 19,809 ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கூட்டத்தில் டி.ஆர்.ஓ., கண்ணன், சப்-கலெக்டர் பிரகாசம், மாநகராட்சி கமிஷனர் சுதா, உதவி ஆணையர் கலால் முருகேசன், மாவட்ட வழங்கல் அலுவலர் சுரேஷ், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மோகன்ராஜ், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் பாலசக்திகங்காதரன் உள்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us