/உள்ளூர் செய்திகள்/கரூர்/ தகுதி தேர்வில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய கோரி தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மனு தகுதி தேர்வில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய கோரி தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மனு
தகுதி தேர்வில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய கோரி தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மனு
தகுதி தேர்வில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய கோரி தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மனு
தகுதி தேர்வில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய கோரி தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மனு
ADDED : செப் 23, 2025 01:20 AM
கரூர், ஆசிரியர் தகுதி தேர்வில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை, மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய கோரி, கரூர் கலெக்டர்
தங்கவேல் மூலம், பிரதமர் மோடிக்கு, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலர் மணிகண்டன் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
அதில், கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களில், 1.75 லட்சம் பேருக்கு மேலானவர்கள், டெட் என்ற ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவில்லை.
இதில், 55 வயதுக்கு உட்பட்ட அனைத்து ஆசிரியர்களும், டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதை, உச்ச நீதிமன்றம் கட்டாயமாக்கி உள்ளது. டெட் வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினால் நாடு முழுவதும், 25 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிக்கப்படும் சூழல் உள்ளது.கட்டாய கல்வி உரிமை சட்டம் அமல்படுத்தப்படுவதற்கு, முன்பு நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு கட்டாயம் என, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்.சிடி.இ.,) குறிப்பிடவில்லை.
ஆசிரியர் தகுதி தேர்வில், உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு குறித்தும், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் பிரிவு 23-ஐ திருத்துவது குறித்தும், மறுஆய்வு மனு தாக்கல் செய்ய பிரதமர் மற்றும் மத்திய கல்வி அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.