/உள்ளூர் செய்திகள்/கரூர்/கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா
கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா
கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா
கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா
ADDED : ஜூன் 20, 2024 07:13 AM
கரூர் : கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நடந்த பிரதோஷ விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.பிரசித்தி பெற்ற, கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் உள்ள, நந்தி சிலைக்கு நேற்று மாலை, 4:30 மணி முதல் பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், சந்தனம், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட, 18 வகையான பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபி ேஷகம் நடந்தது.
ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். மூலவர், நடராஜர் மற்றும் நந்தி சிலைக்கு நடந்த மஹா தீபாராதனைக்கு பிறகு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.* நன்செய் புகழூர் பாகவல்லி அம்பிகை, சமேத மேகபாலீஸ்வரர் கோவில், புன்னம் புன்னைவன நாதர் உடனுறை, புன்னைவன நாயகி கோவில், திருகாடுதுறை மாதேஸ்வரன் கோவில், நத்தமேடு ஈஸ்வரன் கோவில்களிலும் பிரதோஷத்தையொட்டி, நந்தி சிலைகள், மூலவருக்கு சிறப்பு பூஜை நடந்தது.