/உள்ளூர் செய்திகள்/கரூர்/மாயனுார் கதவணையில் மீன்கள் விற்பனை தீவிரம்மாயனுார் கதவணையில் மீன்கள் விற்பனை தீவிரம்
மாயனுார் கதவணையில் மீன்கள் விற்பனை தீவிரம்
மாயனுார் கதவணையில் மீன்கள் விற்பனை தீவிரம்
மாயனுார் கதவணையில் மீன்கள் விற்பனை தீவிரம்
ADDED : ஜூன் 20, 2024 07:13 AM
கிருஷ்ணராயபுரம் : மாயனுார் கதவணை பகுதியில், மீன்கள் விற்பனை தீவிரமாக நடந்தது.கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனுார் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டுள்ளது.
இதில் காவிரி நீர் சேமிக்கப்படுகிறது. மேலும் மீன்கள் வளர்க்கப்படுகின்றன. மீனவர்கள் பரிசலில் சென்று மீன்களை பிடித்து வந்து, கதவணை அருகில் செல்லும் கட்டளை வாய்க்கால் கரையில் வைத்து விற்பனை செய்கின்றனர். தற்போது சீரான முறையில் தண்ணீர் இருப்பதால், மீன்கள் கிடைத்து வருகிறது. ஜிலேப்பி மீன் கிலோ, 150 ரூபாய், கெண்டை மீன், 120 ரூபாய், வீறால் மீன் கிலோ, 650 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கரூர் சுற்று பகுதியை சேர்ந்தவர்கள், மீன்களை வாங்கி சென்றனர்.