Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கைவிடப்பட்ட நங்காஞ்சி ஆறு சீரமைக்க மக்கள் வலியுறுத்தல்

கைவிடப்பட்ட நங்காஞ்சி ஆறு சீரமைக்க மக்கள் வலியுறுத்தல்

கைவிடப்பட்ட நங்காஞ்சி ஆறு சீரமைக்க மக்கள் வலியுறுத்தல்

கைவிடப்பட்ட நங்காஞ்சி ஆறு சீரமைக்க மக்கள் வலியுறுத்தல்

ADDED : செப் 21, 2025 01:14 AM


Google News
அரவக்குறிச்சி, கைவிடப்பட்ட நங்காஞ்சி ஆற்றை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

அமராவதி ஆற்றின் துணை ஆறாக இருக்கும் நங்காஞ்சி ஆறு, ஒட்டன்சத்திரம், வடகாடு கிராம மலைப்பகுதியில் உருவாகும் சிற்றாறுகள், பரப்பலாறு அணையில் தேங்கும் நீர் மற்றும் உபரிநீர் நங்காஞ்சி ஆறு எனும் பெயரில் உருவாகி, இடையகோட்டை வழியாக குடகனாற்றில் கலந்து, கரூர் மாவட்டம் அமராவதி ஆற்றில் கலக்கிறது.

கரூர் மாவட்டத்தில் நங்காஞ்சி ஆற்றை நம்பி, பெரிய அளவிலான விவசாயம் நடைபெறவில்லை என்றாலும், நிலத்தடி நீர் பெருகுவதற்கும், குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வந்தது. வற்றாத ஜீவநதியாக உள்ள காவிரி ஆறு கூட, இயற்கையின் மாறுபட்ட சுழற்சியால் கடந்த காலங்களில் வறட்சியை சந்தித்தது. நங்காஞ்சி ஆறும் இதற்கு விதிவிலக்கு இல்லாமல் சிக்கியது.

இதனால் இந்த ஆறு சிறு ஓடையாக மாறியது. மழை வந்தபோது மட்டுமே தண்ணீர் இந்த ஆறுகளில் ஓடியது. பெரும்பாலான காலங்களில் நதி காய்ந்து கிடந்ததால், பல்வேறு தாவரங்கள் முளைத்து நதி துார்ந்து போனது.

இந்நிலையில் நங்காஞ்சி ஆறு, பொதுமக்கள் குப்பை கொட்டும் இடமாகவும், இறைச்சி கழிவுகளை கொட்டும் இடமாகவும், பன்றிகள் உலாவும் பகுதியாக மாறி வருகிறது. பாரம்பரியமாக இருந்த நங்காஞ்சி ஆறு பாலைவனமாக மாறுவதற்கு முன்பாக, அரசு உரிய நடவடிக்கை எடுத்து, நங்காஞ்சி ஆற்றை மீட்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us