Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/பவித்திரம் கடை வீதியில் லாரிகளை நிறுத்துவதால் மக்களுக்கு இடையூறு

பவித்திரம் கடை வீதியில் லாரிகளை நிறுத்துவதால் மக்களுக்கு இடையூறு

பவித்திரம் கடை வீதியில் லாரிகளை நிறுத்துவதால் மக்களுக்கு இடையூறு

பவித்திரம் கடை வீதியில் லாரிகளை நிறுத்துவதால் மக்களுக்கு இடையூறு

ADDED : ஜூலை 09, 2024 05:43 AM


Google News
அரவக்குறிச்சி: பவித்திரம் கடை வீதியில், லாரிகளை நிறுத்துவதால் மக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.

பவித்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் வசிப்பவர்கள், பள்ளி, கல்லுாரி மாணவ மாணவிகள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் பவித்திரம் பகுதியில் உள்ள, தேசிய நெடுஞ்சாலைக்கு வந்து பஸ்களில் ஏறி கரூர் உள்ளிட்ட ஊர்களுக்கு சென்று வருகின்றனர். ஏராளமானோர் இருசக்கர வாகனங்களில் கரூருக்கு பல்வேறு பணிகளுக்காக சென்று வருகின்றனர்.

இந்நிலையில் தினமும் காலை, மாலை வேளையில் பவித்திரம் மேடு பஸ் நிறுத்தம் முதல், கடைவீதி வரை உள்ள தனியார் ஓட்டல்கள் முன் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் போக்குவரத்திற்கு இடையூறாக லாரி உட்பட நான்கு சக்கர வாகனங்களை ஓட்டுனர்கள் நிறுத்தி விடுகின்றனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன், சிறு சிறு விபத்துகளும் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது.

இடையூறு ஏற்படுத்தும் லாரி மற்றும் கனரக வாகன ஓட்டுனர்கள் மீது போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, இப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. எனவே, பெரிய அளவில் அசம்பாவிதம் நடக்கும் முன், விதி மீறி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நிறுத்தப்படும் லாரி ஓட்டுனர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us