Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/கூட்டுறவு நாளை முன்னிட்டு சென்னையில் மாரத்தான் போட்டி

கூட்டுறவு நாளை முன்னிட்டு சென்னையில் மாரத்தான் போட்டி

கூட்டுறவு நாளை முன்னிட்டு சென்னையில் மாரத்தான் போட்டி

கூட்டுறவு நாளை முன்னிட்டு சென்னையில் மாரத்தான் போட்டி

ADDED : ஜூன் 23, 2025 05:43 AM


Google News
கரூர்: சர்வதேச கூட்டுறவு நாளை முன்னிட்டு, ஜூலை, 6ல், சென்-னையில் மினி மாரத்தான் போட்டி நடக்கிறது என, கரூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கந்தராஜா தெரிவித்-துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதா-வது:சர்வதேச கூட்டுறவு ஆண்டு, 2025 மற்றும் சர்வதேச கூட்டுறவு நாளையொட்டி, ஒருவருக்காக எல்லோரும் ஓடுவோம், எல்-லோரும் ஓடி கூட்டு உருவாக்குவோம் என்ற தலைப்பில், மினி மாரத்தான் போட்டி ஜூலை, 6ல் சென்னை தீவு திடலில் அதி-காலை, 5:30 மணிக்கு நடக்கிறது.

தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் பெரிய கருப்பன், மினி மாரத்தான் போட்டியில் பொதுமக்கள் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். போட்டியில், 18 வயது முதல், 40 வயதுடைய ஆண்கள், பெண்கள் பங்கேற்கலாம்.

வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக, 30 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசாக, 20 ஆயிரம் ரூபாய், மூன்றாம் பரிசாக,

10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக பரிசுகள் வழங்கப்படும். பங்கேற்கும் அனைவ-ருக்கும் பதக்கம், சான்றிதழ், டி-சர்ட் மற்றும் சிற்றுண்டி வழங்-கப்படும்.

மினி மாரத்தான் போட்டியில் பங்கேற்க விரும்புவோர் https;//www.tncu.tn.gov.in/marathon/register என்ற இணையதளத்தில் நுழைவு கட்டணம், 100 ரூபாய் செலுத்தி பதிவு செய்து கொள்-ளலாம். கூடுதல் விபரங்களுக்கு, 97909-54671 என்ற மொபைல் எண்ணிலும், tncu08@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, அறிக்கையில் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us