Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ அமராவதி ஆற்றின் கிளை வாய்க்காலில் கழிவுகளை அகற்ற விவசாயிகள் கோரிக்கை

அமராவதி ஆற்றின் கிளை வாய்க்காலில் கழிவுகளை அகற்ற விவசாயிகள் கோரிக்கை

அமராவதி ஆற்றின் கிளை வாய்க்காலில் கழிவுகளை அகற்ற விவசாயிகள் கோரிக்கை

அமராவதி ஆற்றின் கிளை வாய்க்காலில் கழிவுகளை அகற்ற விவசாயிகள் கோரிக்கை

ADDED : ஜூன் 23, 2025 05:44 AM


Google News
கரூர்: கரூர் அருகே, அமராவதி ஆற்றின் கிளை வாய்க்காலில் கழிவு பொருட்களை அகற்ற வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்-கின்றனர்.

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணையில் இருந்து, கரூர் மாவட்டத்தில் சாகுபடி பணிக்காக, தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தற்போது, அரவக்குறிச்சி, க.பர-மத்தி, தான்தோன்றிமலை பஞ்சாயத்து யூனியன் பகுதிகளில், அமராவதி ஆற்றுப்பகுதியில் சோளம் அறுவடை பணி நிறைவு பெறும் நிலையில் உள்ளது. தற்போது, அடுத்த கட்டமாக நிலத்தை சமன் படுத்துதல், அவுரி பயிரிடுதல் உள்ளிட்ட பணிகள் தொடங்க உள்ளதால், அமராவதி அணையில் இருந்து, குறைந்த-ளவே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், கரூர் அருகே, பஞ்சமாதேவி வழியாக செல்லும் அமராவதி ஆற்றின் கிளை வாய்க்காலில், பிளாஸ்டிக் பொருட்கள், குப்பைகள் அதிகளவில் தேங்கியுள்ளன. மேலும், செடிகளும் வாய்க்காலில் முளைத்து படர்ந்துள்ளது. இதனால், நீரோட்டம் தடைபடுகிறது. எனவே, அமராவதி ஆற்றின் கிளை வாய்க்காலில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் பொருட்கள், குப்பைகள் மற்றும் செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, எதிர்பார்ப்பு விவசாயிகள் இடையே எழுந்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us