மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா
குளித்தலை: குளித்தலை, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று காலை, விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.
மாணவி கீழே குதித்த விவகாரம் ஆசிரியை மீது வழக்குப்பதிவு
கரூர்: கரூரில், பள்ளி மாணவி மாடியில் இருந்து கீழே குதித்த விவகாரத்தில், ஆசிரியை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
க.பாளையம் அரசு பள்ளி மேலாண்மை கூட்டம்
கரூர்: கவுண்டம்பாளையம் அரசு தொடக்கப் பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு கூட்டம், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அறிவு மலர் தலைமையில் நடந்தது.அதில், கல்வி வளர்ச்சிக்காக மத்திய, மாநில அரசுகள் கொண்டு வரும் திட்டங்கள் குறித்தும், பள்ளி வளர்ச்சி பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும், விடுமுறை இல்லாமல் பள்ளி வந்த மாணவர்கள், சிறந்த பெற்றோர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.கூட்டத்தில், தலைமையாசிரியர் பரணிதரன், ஆசிரியர்கள் ஜூலிடாமேரி, அமுதராணி, தெரசாராணி, ஜெயபாரதி, சுமதி உள்பட பலர் பங்கேற்றனர்.
பேச்சுவார்த்தை மூலம் தைப்பூச திருவிழா நடத்த கோரி மனு
குளித்தலை: தைப்பூச திருவிழாவை நடத்தக்கோரி, குளித்தலை ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் தமிழர் தேசம் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது.