Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/அரசு, தனியார் ஐ.டி.ஐ.,யில் விண்ணப்பிக்க அழைப்பு

அரசு, தனியார் ஐ.டி.ஐ.,யில் விண்ணப்பிக்க அழைப்பு

அரசு, தனியார் ஐ.டி.ஐ.,யில் விண்ணப்பிக்க அழைப்பு

அரசு, தனியார் ஐ.டி.ஐ.,யில் விண்ணப்பிக்க அழைப்பு

ADDED : ஜூன் 04, 2024 04:00 AM


Google News
கரூர்: அரசு, தனியார் ஐ.டி.ஐ.,யில், மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர், வெளியிட்ட அறிக்கை:

கரூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம். இதில், கரூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மகளிருக்கு மட்டும் தையல் தொழில்நுட்ப பயிற்சி, கணினி தொழில்நுட்ப பயிற்சி ஓராண்டு காலத்துக்கும், இருபாலருக்கும் மெக்கானிக் ஆட்டோ பாடி ரிப்பேர் படிப்பு ஓராண்டு படிப்பும், ஆபரேட்டர் அட்வான்ஸ்டு மெஷின் டூல்ஸ் படிப்பு இரண்டு ஆண்டு படிப்பாகவும் கற்றுத் தரப்படுகிறது. இந்த படிப்புகளுக்கு சேர, தொழிற் பயிற்சி நிலையத்தின் இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டும். மாதந்தோறும் உதவித்தொகை, இலவச பஸ் பாஸ், சைக்கிள், வரைபடக் கருவிகள், பாட புத்தகங்கள், சீருடை, காலணிகள் அரசால் வழங்கப்படும்.

தனியார் தொழிற் பயிற்சி நிலையத்தில், பிட்டர், எலக்ட்ரீஷியன், வெல்டர், மெக்கானிக், டீசல் மெக்கானிக் ஆகிய பிரிவிகளில் சேரலாம். https://skilltraining.tn.gov.in/DET/ என்ற இணையதளம் மூலமாக, இணைய வழியே சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. ஜூன் 6க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது தொடர்பாக விபரங்களுக்கு தொலைபேசி எண்ணில், 9486313289 தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, அதில், கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us