Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/அமைச்சர் செந்தில் பாலாஜி தம்பி மனைவி வீட்டில் ஆய்வு

அமைச்சர் செந்தில் பாலாஜி தம்பி மனைவி வீட்டில் ஆய்வு

அமைச்சர் செந்தில் பாலாஜி தம்பி மனைவி வீட்டில் ஆய்வு

அமைச்சர் செந்தில் பாலாஜி தம்பி மனைவி வீட்டில் ஆய்வு

ADDED : ஜன 12, 2024 12:28 AM


Google News
Latest Tamil News
கரூர்:சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தில், அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்தாண்டு ஜூன், 14ல் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் உள்ளார். அதே நாளில் கரூரில் உள்ள, அவரின் தம்பி அசோக்குமார் வீடு, அலுவலகம் மற்றும் ராம் நகரில் அசோக்குமார் மனைவி நிர்மலா பெயரில் கட்டப்படும் வீட்டிலும் சோதனை நடந்தது.

இந்நிலையில் நிர்மலா பெயரில் கட்டப்படும் வீட்டில், வருமான வரித்துறை சொத்து மதிப்பீட்டு குழுவினர், எட்டு பேர் நேற்று ஆய்வுக்கு வந்தனர்.

வீட்டின் மொத்த சதுர அடி, வீட்டில் பயன்படுத்தப்படும் கட்டுமான பொருட்கள் குறித்து ஆய்வு செய்தனர். காலை, 8:00 மணிக்கு துவங்கிய ஆய்வு, 11:00 மணிக்கு முடிந்தது.

அசோக்குமாரின் நெருங்கிய நண்பரான சுப்பிரமணியத்தின் கொங்கு மெஸ் நிறுவனம், வெள்ளியணை வால்காட்டுபுதுாரில் உள்ள பண்ணை வீட்டில், வருமான வரித்துறை சொத்து மதிப்பீட்டு குழுவினர், நேற்று முன்தினம் ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகுமாறு, அசோக்குமாருக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் இன்னமும் அவர் தலைமறைவாகவே உள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us