Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கழிவுநீர் வாய்க்காலில்குப்பையால் நோய் தொற்று

கழிவுநீர் வாய்க்காலில்குப்பையால் நோய் தொற்று

கழிவுநீர் வாய்க்காலில்குப்பையால் நோய் தொற்று

கழிவுநீர் வாய்க்காலில்குப்பையால் நோய் தொற்று

ADDED : செப் 01, 2025 02:17 AM


Google News
கரூர்:கரூர் அருகே, கழிவுநீர் வாய்க்காலில் பல நாட்களாக தேங்கியுள்ள குப்பையை அகற்றாததால், நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலை, மில் கேட் பஸ் ஸ்டாப் பகுதியில், 300க்கும் மேற்பட்ட வீடுகள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன. இந்நிலையில், அப்பகுதியில் சாலையில், கழிவுநீர் வாய்க்காலில் கொட்டப்பட்டுள்ள குப்பை, பல நாட்களாக அள்ளப்படாமல் உள்ளது. இதனால், குப்பைகளில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் தொற்று நோய் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும், குப்பைகள் அழுகி கொசு உற்பத்தியும் அதிகரித்துள்ள நிலையில், இரவு நேரத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை துாங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே, கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலை மில்கேட் பஸ் ஸ்டாப் பகுதியில், கழிவு நீர் வாய்க்காலில் கொட்டப்பட்டுள்ள குப்பையை அகற்ற ஆண்டாங்கோவில் கிழக்கு பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us