/உள்ளூர் செய்திகள்/கரூர்/மொபட் மீது வேன் மோதி கணவன் பலி; மனைவி காயம்மொபட் மீது வேன் மோதி கணவன் பலி; மனைவி காயம்
மொபட் மீது வேன் மோதி கணவன் பலி; மனைவி காயம்
மொபட் மீது வேன் மோதி கணவன் பலி; மனைவி காயம்
மொபட் மீது வேன் மோதி கணவன் பலி; மனைவி காயம்
ADDED : ஜூன் 30, 2025 04:05 AM
கரூர்: கரூர் அருகே, மொபட் மீது வேன் மோதிய விபத்தில், கணவன் உயிரிழந்தார். மனைவி படுகாயம் அடைந்தார்.
கரூர் மாவட்டம், மண்மங்கலம் சமத்துவபுரம் பகுதியை சேர்ந்-தவர் வேலுசாமி, 45; இவர், நேற்று முன்தினம் மனைவி சின்ன பொண்ணு, 40, என்பவருடன் டி.வி.எஸ்., ஜூபிடர் மொபட்டில் ஆத்துார் அருகே, அருள் நகர் பிரிவில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, கரூர் எஸ். வெள்ளாப்பட்டி பகுதியை சேர்ந்த பெரிய-சாமி, 51, என்பவர் ஓட்டி சென்ற வேன், வேலுசாமி ஓட்டி சென்ற மொபட் மீது மோதியது. அதில், துாக்கி வீசப்பட்ட வேலு-சாமி, கீழே விழுந்து தலையில் பலத்த அடிபட்டு அதே இடத்தில் உயிரிழந்தார். சின்ன பொண்ணுக்கு காயம் ஏற்பட்டது. இதுகு-றித்து, வேலுசாமியின் மகன் தனுஷ், 21, போலீசில் புகார் செய்தார்.
கரூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.