Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கணவர் மாயம்; மனைவி புகார்

கணவர் மாயம்; மனைவி புகார்

கணவர் மாயம்; மனைவி புகார்

கணவர் மாயம்; மனைவி புகார்

ADDED : அக் 06, 2025 04:25 AM


Google News
குளித்தலை: குளித்தலை அடுத்த கல்லடை பஞ்., மஞ்சள்பட்டியை சேர்ந்தவர் நாகேஸ்வரி, 23. இவரது கணவர் பிரகாஷ், 24. இவர்களுக்கு திரு-மணமாகி மூன்று ஆண்டுகளாகிறது. இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பிரகாஷூக்கு, குழந்தைபட்டியை சேர்ந்த கருப்பண்ணன் மகள் விமலா என்பவருடன் பழக்கம் ஏற்-பட்டது. இது குறித்து பிரகாஷ் மனைவி நாகேஸ்வரி கண்டித்-துள்ளார்.

கடந்த செப்., 29 மாலை 6:00 மணியளவில் தோகைமலைக்கு சென்று வருவதாக கூறி சென்ற பிரகாஷ் பின்னர் வீடு திரும்ப-வில்லை. அவரது மொபைல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்-டுள்ளது. குழந்தைபட்டி கிராமத்திற்கு சென்று விமலாவை பார்த்தபோது விமலாவையும் காணவில்லை.

தனது கணவர் காணாமல் போனது குறித்து பல இடங்களில் தேடியும், விசாரித்தும், எந்தவித தகவலும் கிடைக்கவில்லை என, மனைவி நாகேஸ்வரி கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி

வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us