Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கணவர் மாயம்; மனைவி புகார்

கணவர் மாயம்; மனைவி புகார்

கணவர் மாயம்; மனைவி புகார்

கணவர் மாயம்; மனைவி புகார்

ADDED : ஜூன் 14, 2025 07:39 AM


Google News
குளித்தலை: குளித்தலை அடுத்த, ஆதனுார் பஞ்., பால்மடைபட்டி கிராமத்தை சேர்ந்தவர் விமலா, 29. இவரது கணவர் முருகேசன், 39. இருவரும், திருப்பூர் டெக்ஸ் கம்பெனியில் தங்கி தினக்கூலியாக வேலை செய்து வருகின்றனர். கடந்த ஏப்., 26ல், சொந்த ஊரான பால்மடைபட்டிக்கு திருவிழாவில் கலந்து கொள்ள வந்தனர்.

கடந்த, 1ம் தேதி இரவு 10:00 மணியளவில் முருகேசன் தனது வீட்டில் இருந்து திருப்பூருக்கு வேலைக்கு சென்றவர், அவரது போன் சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது. பின்னர், திருப்பூரில் உள்ள கம்பெனிக்கு சென்று விசாரித்தபோது, அவர் வேலைக்கு வரவில்லை என தெரிவித்தனர். பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.கணவரை காணவில்லை என, மனைவி விமலா கொடுத்த புகார்படி, சிந்தாமணிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us