ஆதார் சிறப்பு முகாம் 16ல் துவக்கம்
ஆதார் சிறப்பு முகாம் 16ல் துவக்கம்
ஆதார் சிறப்பு முகாம் 16ல் துவக்கம்
ADDED : ஜூன் 14, 2025 07:39 AM
கரூர்: கரூர் மாவட்டத்தில், தபால் நிலையங்களில் ஆதார் சிறப்பு முகாம் வரும், 16ல் தொடங்குகிறது.
இதுகுறித்து, கரூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தமிழினி விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கரூர் மாவட்டத்தில், 33 ஆதார் சேவை மையங்கள் இயங்கி வருகின்றன. இந்த சேவை கரூர், குளித்தலை தலைமை தபால் நிலையங்களில் காலை, 8:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை ஞாயிறு உள்பட, அனைத்து நாட்களிலும் செயல்படுத்தப்படும். ஆதார் சிறப்பு முகாம் வரும், 16ல் தொடங்கி வரும் ஜூலை, 15 வரை நடக்கிறது. புதிதாக ஆதார் பதிவு செய்ய கட்டணம் கிடையாது. ஐந்து வயது முதல், 15 வயது வரை, கட்டாய பயோ மெட்ரிக் புதுப்பித்தலுக்கும் கட்டணம் கிடையாது.
குழந்தைக்கு புதிய ஆதார் பதிவு செய்ய, குழந்தையுடன் வரும் தாய் அல்லது தந்தை தங்களின் அசல் ஆவணங்களுடன், குழந்தையின் பிறப்பு சான்றிதழை கொண்டு வர வேண்டும். மொபைல் எண், மின் அஞ்சல் திருத்தம் செய்ய ஆவணங்கள் தேவை இல்லை. மற்ற திருத்தங்களுக்கு அசல் ஆவணங்களை கொண்டு வர வேண்டும். இந்த சேவையை, பொது மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.