Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/உடைந்த நிலையில் வழிகாட்டி போர்டுகள்; கரூரில் வாகன ஓட்டிகள் பெரும் அவதி

உடைந்த நிலையில் வழிகாட்டி போர்டுகள்; கரூரில் வாகன ஓட்டிகள் பெரும் அவதி

உடைந்த நிலையில் வழிகாட்டி போர்டுகள்; கரூரில் வாகன ஓட்டிகள் பெரும் அவதி

உடைந்த நிலையில் வழிகாட்டி போர்டுகள்; கரூரில் வாகன ஓட்டிகள் பெரும் அவதி

ADDED : ஜூன் 22, 2024 12:49 AM


Google News
கரூர் : கரூர் மாவட்டத்தில், பல இடங்களில், நெடுஞ்சாலை துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள வழிகாட்டி போர்டுகள் உடைந்த நிலையில் உள்ளன.

கரூர் நகரை சுற்றி மதுரை, சேலம், திருச்சி தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் கோவை, ஈரோடு மாநில நெடுஞ்சாலைகளும் செல்கிறது. தொழில் வளம் மிகுந்த நகரான கரூருக்கு, பல்வேறு மாவட்டங் களில் இருந்து லாரி, கார், வேன் மற்றும் கன்டெய்னர் லாரிகள் வந்து செல்கின்றன. இதனால், கரூர் மாவட்டத்தில் பல இடங்களில், நெடுஞ்சாலை துறை சார்பில், பல்வேறு ஊர்களுக்கு செல்ல வசதியாக வழிகாட்டி போர்டுகள் வைக்கப்பட்டன. தற்போது வழிகாட்டி போர்டுகளில் இருந்த, ஊர்களின் பெயர் அழிந்துள்ளது.மேலும், பல போர்டுகள் உடைந்து, தொங்குகின்றன. கரூர் மாவட்டத்துக்கு வரும், வெளியூரை சேர்ந்த வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்படுகின்றனர். கரூர் மாவட்ட பகுதிகளில் உடைந்த நிலையில் உள்ள, வழிகாட்டி போர்டுகளை அகற்றி விட்டு, புதிய போர்டுகளை, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் வைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us