Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/மாயனுார் கதவணையில் மீன்கள் விற்பனை தீவிரம்

மாயனுார் கதவணையில் மீன்கள் விற்பனை தீவிரம்

மாயனுார் கதவணையில் மீன்கள் விற்பனை தீவிரம்

மாயனுார் கதவணையில் மீன்கள் விற்பனை தீவிரம்

ADDED : மார் 11, 2025 06:59 AM


Google News
கிருஷ்ணராயபுரம்: மாயனுார் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டுள்ளது. இங்கு காவிரி நீர் சேமிக்கப்பட்டு, மீன்கள் வளர்க்கப்படுகிறது. மீனவர்கள் பரிசலில் சென்று, மீன்களை பிடித்து வந்து விற்பனை செய்கின்றனர்.

காவிரி ஆற்றில் குறைவான தண்ணீர் செல்வதால் மீன்கள் வரத்து உள்ளது. நேற்று ஜிலேப்பி மீன்கள் கிலோ, 130 ரூபாய், கெண்டை மீன், 100 ரூபாய், விறால் மீன் கிலோ, 650 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கரூர், புலியூர், சேங்கல், உப்பிடமங்களம், மணவாசி, லாலாப்பேட்டை பகுதிகளை சேர்ந்த மக்கள் மீன்களை வாங்கி சென்றனர். நேற்று, 150 கிலோ வரை மீன்கள் விற்பனை நடந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us