Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ தீயணைப்பு வீரர்களுக்கு பயிற்சி மண்டல இணை இயக்குனர் ஆய்வு

தீயணைப்பு வீரர்களுக்கு பயிற்சி மண்டல இணை இயக்குனர் ஆய்வு

தீயணைப்பு வீரர்களுக்கு பயிற்சி மண்டல இணை இயக்குனர் ஆய்வு

தீயணைப்பு வீரர்களுக்கு பயிற்சி மண்டல இணை இயக்குனர் ஆய்வு

ADDED : மே 24, 2025 01:38 AM


Google News
கரூர், கரூர் அருகே நடந்து வரும், தீயணைப்பு துறை வீரர்களுக்கான பயிற்சி முகாமை, திருச்சி மண்டல தீயணைப்பு துறை இணை இயக்குனர் குமார் நேற்று பார்வையிட்டார்.

தமிழக தீயணைப்பு துறைக்கு சமீபத்தில் புதிதாக, 650 பேர் தேர்வு செய்யப்பட்டனர். மாநிலம் முழுவதும், மண்டலம் வாரியாக ஆறு மையங்களில், புதிய தீயணைப்பு வீரர்களுக்கு அடிப்படையிலான, 90 நாள் பயிற்சி முகாம் கடந்த மாதம் தொடங்கியது.

திருச்சி மத்திய மண்டலத்துக்குட்பட்ட, 98 புதிய தீயணைப்பு வீரர்களுக்கு, கரூர் அருகே வேட்ட மங்கலத்தில் உள்ள, தனியார் கல்லுாரியில் பயிற்சி முகாம் நடந்து வருகிறது. அதை நேற்று, திருச்சி மத்திய மண்டல தீயணைப்பு துறை இணை இயக்குனர் குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் வடிவேல், உதவி மாவட்ட அலுவலர்கள் கருணாகரன், கோமதி, திருமுருகன் உள்பட பலர் உடனிருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us