Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ சேலம் சாலையில் ஆறாக ஓடிய கழிவுநீரால் ஓட்டுனர்கள் அவஸ்தை

சேலம் சாலையில் ஆறாக ஓடிய கழிவுநீரால் ஓட்டுனர்கள் அவஸ்தை

சேலம் சாலையில் ஆறாக ஓடிய கழிவுநீரால் ஓட்டுனர்கள் அவஸ்தை

சேலம் சாலையில் ஆறாக ஓடிய கழிவுநீரால் ஓட்டுனர்கள் அவஸ்தை

ADDED : மே 24, 2025 01:37 AM


Google News
கரூர், கரூர் அருகே சாலையில், கழிவுநீர் நேற்று காலை ஆறாக ஓடியது. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்பட்டனர்.

கரூர் - சேலம் பழைய சாலை சர்ச் கார்னர் பிரிவில், குடியிருப்புகள், தனியார் பள்ளி, கல்லுாரி, மற்றும் வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. ஆனால், அப்பகுதியில் உள்ள, சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. அதை, சரி செய்யக்கோரி பொதுமக்கள் கோரிக்கை வைத்தும், கரூர் மாநகராட்சி நிர்வாகம் சரி செய்யாமல் உள்ளது.

இந்நிலையில், பல நாட்களாக கரூர்-சேலம் பழைய சாலை சர்ச் கார்னர் பிரிவில், சாக்கடை கால்வாயில் இருந்து, கழிவுநீர் வெளியேறி, சேலம் சாலையில் ஆறாக ஓடுகிறது.

துர்நாற்றம் வீசுவதால், அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். தற்போது அடிக்கடி

மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலை, சாக்கடை கால்வாயில் இருந்து கழிவுநீர், சாலையில் ஆறாக ஓடியது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள், சாக்கடை கால்வாயில் இருந்து, கழிவுநீர் வெளியேறுவதை தடுக்க வேண்டியது அவசியம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us