Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ பல இடங்களில் பாதாள சாக்கடை சிமென்ட் மூடிகள் சேதத்தால் அச்சம்

பல இடங்களில் பாதாள சாக்கடை சிமென்ட் மூடிகள் சேதத்தால் அச்சம்

பல இடங்களில் பாதாள சாக்கடை சிமென்ட் மூடிகள் சேதத்தால் அச்சம்

பல இடங்களில் பாதாள சாக்கடை சிமென்ட் மூடிகள் சேதத்தால் அச்சம்

ADDED : செப் 22, 2025 01:46 AM


Google News
கரூர்:கரூர் மாநகராட்சி பகுதிகளில், பல இடங்களில் பாதாள சாக்கடை சிமென்ட் மூடிகள் உடைந்துள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணித்து வருகின்றனர்.கரூர் மாநகராட்சி, பழைய கரூர் மற்றும் இனாம் கரூர் நகராட்சி பகுதிகளில், பாதாள சாக்கடை திட்டம் செயல்பாட்டில் உள்ளது. பாதாள சாக்கடை குழாயில் அடைப்பு ஏற்படும்போது, அதை சரி செய்ய வசதியாக வட்ட வடிவில் மேல் பகுதிகளில், துவாரம் விடப்பட்டு, சிமென்ட் மூடிகள் போடப்பட்டுள்ளன. பல முக்கிய சாலைகளில், பாதாள சாக்கடை மேல் பகுதியில் போடப்பட்டுள்ள, சிமென்ட் மூடிகள் சேதமடைந்துள்ளன. குறிப்பாக, அதில் உள்ள இரும்பு கம்பிகள் வெளியே தெரியும் அளவுக்கு சேதமடைந்துள்ளது. இதனால், வாகனங்களின் டயர்கள் சேதமடைகின்றன.

இரவில், டூவீலரில் செல்கிறவர்கள் தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைகின்றனர். பாதாள சாக்கடை சிமென்ட் மூடி சேதமடைந்துள்ளது என, அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தாலும், அதை உடனடியாக சரி செய்யாமல், மாநகராட்சி நிர்வாகம் அலட்சியமாக இருந்து வருகிறது. பருவமழை துவங்கும் முன், சேதமடைந்துள்ள பாதாள சாக்கடை மூடிகளை உடனடியாக சீரமைக்க, கரூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us