ADDED : ஜூன் 26, 2025 01:43 AM
கரூர், கரூர் அருகே, வேன் மோதி மூதாட்டி உயிரிழந்தார்.கரூர்,
தான்தோன்றிமலை முத்துலாடம்பட்டி பகுதியை சேர்ந்தவர்
செல்லம்மாள், 60; இவர் கடந்த, 24ல் கரூர்-பாளையம் சாலை
தான்தோன்றிமலையில், ஸ்டூடியோ முன் நின்று கொண்டிருந்தார்.
அப்போது, திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை பகுதியை சேர்ந்த
லோகேஸ்வரன், 39; என்பவர் ஓட்டி சென்ற, வேன் செல்லம்மாள் மீது
மோதியது.
அதில், தலையில் படுகாயமடைந்த செல்லம்மாள், அதே இடத்தில்
உயிரிழந்தார். இது குறித்து, செல்லம்மாளின் மகன் அண்ணா துரை, 41,
கொடுத்த புகார்படி, தான்தோன்றிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து
விசாரிக்கின்றனர்.