Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/லாலாப்பேட்டையில் வாழைத்தார் வரத்து சரிவு

லாலாப்பேட்டையில் வாழைத்தார் வரத்து சரிவு

லாலாப்பேட்டையில் வாழைத்தார் வரத்து சரிவு

லாலாப்பேட்டையில் வாழைத்தார் வரத்து சரிவு

ADDED : ஜூன் 07, 2024 12:03 AM


Google News
கிருஷ்ணராயபுரம் : லாலாப்பேட்டை, ஏலம் கமிஷன் மண்டியில் வாழைத்தார்கள் வரத்தில் சரிவு ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பிள்ளபாளையம், வல்லம், கொம்பாடிப்பட்டி, வீரவள்ளி, வீரகுமரான்பட்டி, கருப்பத்துார், கள்ளப்பள்ளி, சிந்தலவாடி, மகாதானபுரம், பொய்கைப்புத்துார், கம்மநல்லுார் ஆகிய பகுதியில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்து வருகின்றனர். அறுவடை செய்து லாலாப்பேட்டை வாழைக்காய் ஏலம் கமிஷன் மண்டிக்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது.

மழை காரணமாக வாழைத்தார்கள் வரத்து சரிந்துள்ளது. இதனால் விலை உயர்ந்து விற்கப்பட்டது. கடந்த வாரம் பூவன் தார், 300 ரூபாய்க்கு விற்றது. நேற்று, 400 ரூபாய்க்கு விலை போனது. மற்ற ரக வாழைத்தார்களும் விலை உயர்ந்த நிலையில் விற்கப்பட்டது. கற்பூரவள்ளி தார், 200 ரூபாயில் இருந்து, 250 ரூபாய், ரஸ்தாளி தார், 50 ரூபாய் உயர்ந்து தார், 350 ரூபாய்க்கு விற்கப்பட்டது. உள்ளூர், வெளியூர் வியாபாரிகள் வாங்கி சென்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us