Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ பசு மேக்கிப்பட்டியில் மாடு மாலை தாண்டும் விழா

பசு மேக்கிப்பட்டியில் மாடு மாலை தாண்டும் விழா

பசு மேக்கிப்பட்டியில் மாடு மாலை தாண்டும் விழா

பசு மேக்கிப்பட்டியில் மாடு மாலை தாண்டும் விழா

ADDED : ஜூன் 06, 2025 01:55 AM


Google News
குளித்தலை, குளித்தலை அடுத்த, கூடலுார் பஞ்., பசு மேக்கிப்பட்டியில் கோவில் திருவிழாவை முன்னிட்டு, தாசில் மாது நாயக்கர் மந்தை சார்பில், மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கரூர், திருச்சி, திண்டுக்கல், நாமக்கல், புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த, 16 மந்தை மாடுகள் கலந்து கொண்டன. முன்னதாக விழா குழு சார்பில், மாடுகளுக்கு புனித நீர் தெளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, 16 மந்தைகளை சேர்ந்த, 300க்கும் மேற்பட்ட மாடுகள், 2 கி.மீ., துாரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து ஓட்டி வரப்பட்டன.

இதில் திருச்சி மாவட்டம், தொட்டியபட்டியை சேர்ந்த ஐந்து ஊர் மந்தை மாடு முதலாவதாகவும், இரண்டாவதாக புதுக்கோட்டை மாவட்டம், சேமங்கலத்தை சேர்ந்த அய்யாசாமி மந்தை நாயக்கர் மந்தை மாடும் வந்தன. வெற்றி பெற்ற மாட்டின் மந்தைதாரர்களுக்கு எலுமிச்சை கனி பரிசாக வழங்கப்பட்டது. தொடர்ந்து தேவராட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கானோர் கண்டுகளித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us