ADDED : மே 11, 2025 01:05 AM
கரூர், இ.கம்யூ., கட்சி சார்பில், கரூர் மாநகர, 11 வது மாநாடு, நகர செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் கரூரில் நடந்தது.
கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், டாக்டர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். நோயாளிகளுக்கு இருக்கை வசதி செய்து தர வேண்டும். சொத்து வரிக்கு அபராதம் விதிக்கும் முறையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்
பட்டன.
மாநாட்டில், மாவட்ட இ.கம்யூ., செயலாளர் நாட்ராயன், நிர்வாகிகள் மோகன்குமார், ராஜேந்திரன், நேதாஜி, நடராஜன், ஜெயபால் உள்பட பலர் பங்கேற்றனர்.