Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ஆபாசமாக பேசிய விவசாயி மீது வழக்கு

ஆபாசமாக பேசிய விவசாயி மீது வழக்கு

ஆபாசமாக பேசிய விவசாயி மீது வழக்கு

ஆபாசமாக பேசிய விவசாயி மீது வழக்கு

ADDED : செப் 11, 2025 01:25 AM


Google News
குளித்தலை குளித்தலை அடுத்த நச்சலுார், மேலத்தெருவை சேர்ந்தவர் தங்கவேலு, 70; விவசாயி. இவருக்கு சொந்தமான நிலத்தில் ஏற்பட்ட பிரச்னை சம்பந்தமாக, நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், புரசம்பட்டியை சேர்ந்த முருகேசன், 56, என்பவர், அந்த நிலத்தில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டார்.

இதையறிந்த தங்கவேலு, கடந்த, 6 மதியம், 1:30 மணிக்கு, 'தனக்கு சொந்தமான நிலத்தில், எப்படி நீங்கள் வேலை செய்யலாம்' என, கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், முருகேசன் ஆபாச வார்த்தைகளால் பேசி திட்டியுள்ளார். இதுகுறித்து தங்கவேலு அளித்த புகார்படி, முருகேசன் மீது நங்கவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து

விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us