Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ வேலி போடுவதில் தகராறு இருதரப்பினர் மீது வழக்கு

வேலி போடுவதில் தகராறு இருதரப்பினர் மீது வழக்கு

வேலி போடுவதில் தகராறு இருதரப்பினர் மீது வழக்கு

வேலி போடுவதில் தகராறு இருதரப்பினர் மீது வழக்கு

ADDED : ஜூன் 23, 2025 05:22 AM


Google News
குளித்தலை: குளித்தலை அடுத்த வைகைநல்லுார் பஞ்., கீழ தாளியாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் துரைராஜ், 70; இவர் கடந்த, 19 மாலை, 5:00 மணிக்கு தன் வீட்டை சுற்றி வேலி அமைத்தார்.

அப்போது அவரது தம்பி சேட்டு, வேலி அமைக்க எதிர்ப்பு தெரிவித்-துள்ளார். சேட்டுவின் மனைவி தங்கம்மாள், துரைராஜ் அவரது மனைவி அமிர்தம் ஆகிய இருவரையும் தகாத வார்த்தையில் பேசி, கட்டையால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில் காயமடைந்த துரைராஜ், குளித்தலை அரசு மருத்துவம-னையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து புகார்படி, இரு-தரப்பினர் மீதும் குளித்தலை போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us