/உள்ளூர் செய்திகள்/கரூர்/கரூரில் பக்ரீத் பண்டிகை: இஸ்லாமியர்கள் தொழுகைகரூரில் பக்ரீத் பண்டிகை: இஸ்லாமியர்கள் தொழுகை
கரூரில் பக்ரீத் பண்டிகை: இஸ்லாமியர்கள் தொழுகை
கரூரில் பக்ரீத் பண்டிகை: இஸ்லாமியர்கள் தொழுகை
கரூரில் பக்ரீத் பண்டிகை: இஸ்லாமியர்கள் தொழுகை
ADDED : ஜூன் 18, 2024 07:23 AM
கரூர் : பக்ரீத் பண்டிகையையொட்டி கரூர் மாவட் டத்தில், மசூதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.
உலகம் முழுவதும் நேற்று, பக்ரீத் பண்டி கையை இஸ்லாமியர்கள் கொண்டாடினர். கரூர் மாவட்டத்தில், 40 க்கும் மேற்பட்ட மசூதிகள் உள்ளது. அதில், இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். கரூர் நகரில் ஈத்கா பள்ளி வாசல், பெரிய மற்றும் சிறிய பள்ளி வாசல்களிலும் தொழுகை நடந்தது. அதில், ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.* அரவக்குறிச்சி ஈத்கா மைதானத்தில், ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கூட்டு தொழுகையில் நேற்று ஈடுபட்டனர். முடிவில் ஒருவருக்கொருவர் ஈகை திருநாள் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். பின்னர் அவரவர் வசதிக்கேற்ப ஆடு, மாடு ஆகியவற்றை குர்பானி கொடுத்தனர். உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும் பிரித்து கொடுத்தனர்.* பள்ளப்பட்டி ஈத்கா மைதானத்தில், 5,000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். பக்ரீத் பண்டிகை கொண்டாடுவதற்காக, வெளிமாநிலங்களில் வணிகம் செய்யும் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சொந்த ஊர் திரும்பி உள்ளனர். இதனால் அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி பகுதிகளில் பக்ரீத் பண்டிகை களை கட்டியது.