/உள்ளூர் செய்திகள்/கரூர்/கரூர் கொங்கு மெஸ் நிறுவனத்தில் சொத்து மதிப்பீட்டு குழு ஆய்வுகரூர் கொங்கு மெஸ் நிறுவனத்தில் சொத்து மதிப்பீட்டு குழு ஆய்வு
கரூர் கொங்கு மெஸ் நிறுவனத்தில் சொத்து மதிப்பீட்டு குழு ஆய்வு
கரூர் கொங்கு மெஸ் நிறுவனத்தில் சொத்து மதிப்பீட்டு குழு ஆய்வு
கரூர் கொங்கு மெஸ் நிறுவனத்தில் சொத்து மதிப்பீட்டு குழு ஆய்வு
ADDED : ஜன 11, 2024 12:26 PM
கரூர்: கரூரில் கொங்கு மெஸ் நிறுவனத்தில், நேற்று வருமான வரித்துறை சொத்து மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு செய்தனர்.
சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தில், கடந்தாண்டு ஜூன், 14ல் கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் இருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி. இவருக்கு நெருக்கமானவர், கரூர் தான்தோன் றிமலை பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன், 48. கரூர் - ஈரோடு சாலையில் உள்ள சுப்பிரமணியத்துக்கு சொந்தமான கொங்கு மெஸ் நிறுவனம் மற்றும் அவரது வீட்டில் கடந்த மே மாதம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்நிலையில், நேற்று மதியம், 12:30 மணிக்கு கோவையில் இருந்து வந்த வருமான வரித்துறை சொத்து மதிப்பீட்டு குழுவினர், 7 பேர், கரூர் - கோவை சாலையில் கொங்கு மெஸ் நிறுவனத்தின் புதிய நான்கு மாடி கட்டடம் மற்றும் பேக்கரியில் ஆய்வு செய்தனர்.
மதியம், 1:30 மணிக்கு ஆய்வை முடித்து கொண்டு புறப்பட்டனர்.
தி.மு.க., வினர் அதிர்ச்சி
அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமின் மனு மீதான தீர்ப்பு, நாளை சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழங்கப்பட உள்ளது.
நிச்சயம் ஜாமின் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், கரூர் மாவட்ட தி.மு.க., வினர்
உள்ளனர். இந்நிலையில், மீண்டும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான, கொங்கு மெஸ் உரிமையாளர் சுப்பிரமணியத்தின் நிறுவனத்தில், நேற்று வருமான வரித்துறை, சொத்து மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு செய்ததால், தி.மு.க., வினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.