Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/லடாக்கில் ராணுவ டாங்கி விபத்தில் சிக்கியது: 5 வீரர்கள் மரணம்

லடாக்கில் ராணுவ டாங்கி விபத்தில் சிக்கியது: 5 வீரர்கள் மரணம்

லடாக்கில் ராணுவ டாங்கி விபத்தில் சிக்கியது: 5 வீரர்கள் மரணம்

லடாக்கில் ராணுவ டாங்கி விபத்தில் சிக்கியது: 5 வீரர்கள் மரணம்

UPDATED : ஜூன் 29, 2024 12:55 PMADDED : ஜூன் 29, 2024 11:36 AM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

லே: லடாக் எல்லையில் ராணுவ பயிற்சியின் போது டாங்கி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு, 5 வீரர்கள் உயிரிழந்தனர்.

லடாக் அருகே சீன எல்லைப் பகுதியில் ராணுவ வீரர்கள் ஆற்றைக் கடக்கும் பயிற்சி மேற்கொண்டனர். அப்போது ஆற்றில் திடீரென நீர்மட்டம் உயர்ந்ததால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 5 ராணுவ வீரர்கள் தண்ணீர் அடித்து செல்லப்பட்டனர். ஐந்து பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.

அதிகாலை 3 மணிக்கு ஆற்றைக் கடக்கும் பயிற்சி நடந்தது. லேயில் இருந்து 148 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மந்திர் மோர்க்கு அருகில் உள்ள ஆற்றைக் கடந்து, டாங்கி சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டது என ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us