லடாக்கில் ராணுவ டாங்கி விபத்தில் சிக்கியது: 5 வீரர்கள் மரணம்
லடாக்கில் ராணுவ டாங்கி விபத்தில் சிக்கியது: 5 வீரர்கள் மரணம்
லடாக்கில் ராணுவ டாங்கி விபத்தில் சிக்கியது: 5 வீரர்கள் மரணம்
UPDATED : ஜூன் 29, 2024 12:55 PM
ADDED : ஜூன் 29, 2024 11:36 AM

லே: லடாக் எல்லையில் ராணுவ பயிற்சியின் போது டாங்கி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு, 5 வீரர்கள் உயிரிழந்தனர்.
லடாக் அருகே சீன எல்லைப் பகுதியில் ராணுவ வீரர்கள் ஆற்றைக் கடக்கும் பயிற்சி மேற்கொண்டனர். அப்போது ஆற்றில் திடீரென நீர்மட்டம் உயர்ந்ததால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 5 ராணுவ வீரர்கள் தண்ணீர் அடித்து செல்லப்பட்டனர். ஐந்து பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.
அதிகாலை 3 மணிக்கு ஆற்றைக் கடக்கும் பயிற்சி நடந்தது. லேயில் இருந்து 148 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மந்திர் மோர்க்கு அருகில் உள்ள ஆற்றைக் கடந்து, டாங்கி சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டது என ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.