Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/மனுக்களை மாலையாக அணிந்து வந்து கலெக்டரிடம் முறையீடு

மனுக்களை மாலையாக அணிந்து வந்து கலெக்டரிடம் முறையீடு

மனுக்களை மாலையாக அணிந்து வந்து கலெக்டரிடம் முறையீடு

மனுக்களை மாலையாக அணிந்து வந்து கலெக்டரிடம் முறையீடு

ADDED : ஜூலை 16, 2024 01:48 AM


Google News
கரூர்: கரூர் கலெக்டர் அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது.

இதில் கிருஷ்ணராயபுரம், மேளக்கார தெருவை சேர்ந்த அமிர்தானந்தம் என்பவர், 'கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்-சாயத்து மீது, பல்வேறு முறைகேடுகள் தொடர்பான மனுக்க-ளுக்கு நடவடிக்கை இல்லை' என்று கூறி, மனுக்களை மாலை-யாக அணிந்து மனு கொடுக்க வந்தார்.அவர், அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்தில் பல்வேறு பணிகளில் முறைகேடு நடந்து வருகிறது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் தனிப்பிரிவு, கலெக்டர் அலுவலகம் ஆகிய இடங்களில் மனு கொடுத்து வருகிறேன். இதனால், ஆத்-திரமடைந்த கும்பல், என்மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி உள்ளது. அந்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்காமல், போலீசார் என் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அந்த முறைகேடு தொடர்பாக விசாரணை, என் தரப்பில் விளக்கம் கேட்காமல் முடித்து விட்டனர். எனக்கு உரிய பாதுகாப்பு அளித்து, விசா-ரணை முறையாக நடந்த வேண்டும். இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us