Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ குளித்தலையில் அம்மன் திருவீதி உலா

குளித்தலையில் அம்மன் திருவீதி உலா

குளித்தலையில் அம்மன் திருவீதி உலா

குளித்தலையில் அம்மன் திருவீதி உலா

ADDED : அக் 04, 2025 01:00 AM


Google News
குளித்தலை, குளித்தலை, பெரியபாலத்தில் அமைந்துள்ள வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், கடந்த மாதம், 22ல் நவராத்திரி விழா தொடங்கியது. தொடர்ச்சி யாக விஜயதசமியான நேற்று முன்தினம் இரவு, அம்மன் ஜம்பு சவாரி என்ற அலங்காரத்தில் அம்மனை அலங்கரித்து அலங்கார வாகனத்தில், வாண வேடிக்கையுடன் மேளதாளங்கள் முழங்க, முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வந்தது.

பின்னர் அம்மனுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கோவில் குடிப்பாட்டுக்காரர்கள், கிராம மக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று கோவிலில் விடையாத்தி நிகழ்ச்சி நடைபெற்றது. விழாக்குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us