Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ க.பரமத்தி அருகே 10 யூனிட் ஆற்று மணல் பறிமுதல்

க.பரமத்தி அருகே 10 யூனிட் ஆற்று மணல் பறிமுதல்

க.பரமத்தி அருகே 10 யூனிட் ஆற்று மணல் பறிமுதல்

க.பரமத்தி அருகே 10 யூனிட் ஆற்று மணல் பறிமுதல்

ADDED : ஜூன் 22, 2025 01:09 AM


Google News
கரூர், க.பரமத்தி அருகே, சட்ட விரோதமாக குவித்து வைக்கப்பட்டிருந்த, 10 யூனிட் ஆற்று மணலை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே விஸ்வநாதபுரி அனியாபுரம் பகுதியில், அமராவதி ஆற்றில் இருந்து எடுக்கப்பட்ட மணல், சட்ட விரோதமாக குவித்து வைக்கப்பட்டுள்ளதாக, வருவாய் துறை மற்றும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, நேற்று க.பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கராசு மற்றும் வருவாய் துறையினர், அனியாபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, தனியாருக்கு சொந்தமான இடத்தில், 10 யூனிட் மணல் குவித்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து மணல் மற்றும் இரண்டு மாட்டு வண்டிகளை, க.பரமத்தி போலீசார் பறிமுதல் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us