Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா

ADDED : மார் 12, 2025 07:58 AM


Google News
கரூர்: கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரதோஷ விழா கொண்டாடப்பட்டது.

பிரசித்தி பெற்ற, கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் உள்ள, நந்தி சிலைக்கு நேற்று மாலை, 4:30 மணி முதல் பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், சந்தனம், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவியங்களால் அபிேஷகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். மூலவர், நடராஜர் மற்றும் நந்தி சிலைக்கு நடந்த மஹா தீபாராதனைக்கு பிறகு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

* வேலாயுதம்பாளையம் அருகே, நன்செய் புகழூர் பாகவல்லி அம்பிகை சமேத மேகமாலீஸ்வரர் கோவிலில் உள்ள, நந்தி சிலைக்கு வாசனை திரவியங்கள் மூலம் அபி ேஷகம் நடந்தது. மூலவர் மேகமாலீஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

* குளித்தலை அடுத்த, ஆர்.டி.மலை விராச்சிலேஸ்வரர் கோவிலில், நந்தீஸ்வரருக்கு தேன், பன்னீர், இளநீர், சந்தனம், பால், பழங்கள் கொண்டு அபிஷேகம் நடந்தது.

இதேபோல், குளித்தலை கடம்பவனேஸ்வரர், அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர், சிவாயம் சிவபுரீஸ்வரர், குளித்தலை மீனாட்சிசுந்தரேஸ்வரர், உள்பட பல்வேறு சிவாலயங்களில் பிரதோஷ பூஜை நடந்தது. ஏராளமானோர் சுவாமியை வழிபட்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us