Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ முருகன் கோவிலில் கிருத்திகை சிறப்பு வழிபாடு பூஜை

முருகன் கோவிலில் கிருத்திகை சிறப்பு வழிபாடு பூஜை

முருகன் கோவிலில் கிருத்திகை சிறப்பு வழிபாடு பூஜை

முருகன் கோவிலில் கிருத்திகை சிறப்பு வழிபாடு பூஜை

ADDED : ஜூலை 03, 2024 03:01 AM


Google News
கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம், முருகன் கோவிலில் ஆனி மாத கிருத்திகை சிறப்பு வழிபாடு பூஜை நடந்தது.கரூர் - திருச்சி நெடுஞ்சாலையில், கிருஷ்ணராயபுரத்தில் முருகன் கோவில் உள்ளது. இங்கு நேற்று ஆனி மாத கிருத்திகை சிறப்பு வழிபாடு பூஜைகள் செய்யப்பட்டது. முன்னதாக முருகனுக்கு பால், தயிர், இளநீர், பழரசம், வாசனை திரவியங்களால் அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து முருகனுக்கு மலர் மாலைகள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் தீபாராதனை காட்டப்பட்டது.

கிருஷ்ணராயபுரம் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.* கரூர் அருகே, புகழிமலை பாலசுப்பிரமணி சுவாமி கோவிலில், மூலவருக்கு ஆனி மாத கிருத்திகையையொட்டி பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவியங்கள் மூலம் அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு பூக்கள் அலங்காரத்தில் மூலவர், பக்தர்களுக்கு காட்சியளித்தார். மஹா தீபாராதனைக்கு பிறகு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.அதேபோல், நன்செய் புகழூர் அக்ரஹாரம் சுப்பிரமணிய சுவாமி கோவில், புன்னம் சத்திரம் பாலமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலிலும், ஆனி மாத கிருத்திகையையொட்டி, சிறப்பு பூஜை நடந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us