/உள்ளூர் செய்திகள்/கரூர்/ விவசாய களத்தை ஆக்கிரமித்த முள் செடிகளால் தொல்லை விவசாய களத்தை ஆக்கிரமித்த முள் செடிகளால் தொல்லை
விவசாய களத்தை ஆக்கிரமித்த முள் செடிகளால் தொல்லை
விவசாய களத்தை ஆக்கிரமித்த முள் செடிகளால் தொல்லை
விவசாய களத்தை ஆக்கிரமித்த முள் செடிகளால் தொல்லை
ADDED : ஜூன் 02, 2024 07:24 AM
கிருஷ்ணராயபுரம் : வயலுாரில், விவசாய களத்தை சுற்றி முள் செடிகள் வளர்ந்து ஆக்கிரமித்துள்ளதால், களத்தை பயன்படுத்த முடியாமல் விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த வயலுாரில், பஞ்சப்பட்டி சாலை பிரிவு அருகே விவசாய களம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த களத்தில், விவசாயிகள் அறுவடை செய்யப்படும் விளை பொருட்களான எள், சோளம், துவரை ஆகியவற்றை உலர்த்தி தரம் பிரித்து வருகின்றனர். தற்போது, விவசாய களத்தை சுற்றி முள் செடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. இதனால், அறுவடை செய்யப்படும் பொருட்களை உலர்த்த முடியாத நிலை உள்ளது.
எனவே, பஞ்., நிர்வாகம், விவசாய களத்தை சுற்றி வளர்ந்துள்ள முள் செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.